குறள் 31:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
கலைஞர் உரை:
சிறப்பையும்,
செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக்
கூடிய வழி வேறென்ன இருக்கிறது?.
சாலமன் பாப்பையா உரை:
அறம், நான்கு பேர் முன்
நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும்
கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும்
மேன்மையானது நமக்கு உண்டா?
Translation:
It yields distinction, yields prosperity; what gain Greater
than virtue can a living man obtain?
Explanation:
Virtue will confer heaven and wealth; what greater source of
happiness can man possess ?
|
குறள் 32:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
கலைஞர் உரை:
நன்மைகளின்
விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு
ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை
விடத் தீமையானதும் வேறில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்வதை விட நன்மையும்
இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட
கெடுதியும் இல்லை.
Translation:
No greater gain than virtue aught can cause; No greater loss
than life oblivious of her laws.
Explanation:
There can be no greater source of good than (the practice
of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of
it.
|
குறள் 33:
ஒல்லும்
வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
கலைஞர் உரை:
செய்யக்கூடிய
செயல்கள் எவை ஆயினும், அவை
எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இடைவிடாமல்
இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும்
அறச்செயலைச் செய்க.
Translation:
To finish virtue's work with ceaseless effort strive, What way
thou may'st, where'er thou see'st the work may thrive.
Explanation:
As much as possible, in every way, incessantly practise
virtue.
|
குறள் 34:
மனத்துக்கண்
மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
ஆகுல நீர பிற.
கலைஞர் உரை:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத்
தவிர வேறொன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்து
அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக;
அறம் என்பது அவ்வளவே; பிற
வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும்
ஆடம்பரங்களே.
Translation:
Spotless be thou in mind! This only merits virtue's name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.
Explanation:
Let him who does virtuous deeds be of spotless mind; to that
extent is virtue; all else is vain show.
|
குறள் 35:
அழுக்காறு
அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
இழுக்கா இயன்றது அறம்.
கலைஞர் உரை:
பொறாமை,
பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல்
ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப்
பொருந்தாதவைகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் மேன்மை கண்டு பொறாமை,
புலன்கள் போகும் வழிச் செல்லும்
ஆசை, இவை தடைபடும் போது
வரும் கோபம், கோபத்தில் பிறக்கும்
தீய சொல் எனும் இந்நான்கையும்
விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
Translation:
'Tis virtue when, his footsteps sliding not through envy,
wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path.
Explanation:
That conduct is virtue which is free from these four things,
viz, malice, desire, anger and bitter speech.
|
குறள் 36:
அன்றறிவாம்
என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
கலைஞர்
உரை:
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல்
அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின்
கூட அழியாப் புகழாய் நிலைத்துத்
துணை நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
முதுமையில்
செய்யலாம் என எண்ணாமல் இப்போதே
அறத்தைச் செய்க; அந்த அறம்
நாம் அழியும் போது தான்
அழியாமல் நமக்கு துணை ஆகும்.
Translation:
Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise';
Thus, when thou diest, shalt thou find a help that never dies.
Explanation:
Defer not virtue to another day; receive her now; and at the
dying hour she will be your undying friend.
|
குறள் 37:
அறத்தாறு
இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
கலைஞர் உரை:
அறவழியில்
நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும்
இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை
மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை
ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி
கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தைச்
செய்வதால் வரும் பயன் இது
என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது
இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட
அளவில் பயனை அறியலாம்.
Translation:
Needs not in words to dwell on virtue's fruits: compare The
man in litter borne with them that toiling bear!
Explanation:
The fruit of virtue need not be described in books; it may
be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.
|
குறள் 38:
வீழ்நாள்
படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
கலைஞர் உரை:
பயனற்றதாக
ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து
நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப்
பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த
நற்செயல்களே விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தை
செய்யாது விட்ட நாள் இல்லை
என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால்,
அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும்
வழியை அடைக்கும் கல் ஆகும்.
Translation:
If no day passing idly, good to do each day you toil, A
stone it will be to block the way of future days of moil.
Explanation:
If one allows no day to pass without some good being done,
his conduct will be a stone to block up the passage to other births.
|
குறள் 39:
அறத்தான்
வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
புறத்த புகழும் இல.
கலைஞர் உரை:
தூய்மையான
நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற
புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில்
வருவது புகழும் ஆகாது; இன்பமும்
ஆகாது.
சாலமன் பாப்பையா உரை:
அறத்துடன்
வருவதே இன்பம்; பிற வழிகளில்
வருவன துன்பமே; புகழும் ஆகா.
Translation:
What from virtue floweth, yieldeth dear delight; All else
extern, is void of glory's light.
Explanation:
Only that pleasure which flows from domestic virtue is
pleasure; all else is not pleasure, and it is without praise.
|
குறள் 40:
செயற்பால
தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
உயற்பால தோரும் பழி.
கலைஞர் உரை:
பழிக்கத்
தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம்
கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன்
செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத்
தக்கவை தீய செயல்களே.
Translation:
'Virtue' sums the things that should be done; 'Vice' sums
the things that man should shun.
Explanation:
That is virtue which each ought to do, and that is vice
which each should shun.
|