குறள் 41:
இல்வாழ்வான்
என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
நல்லாற்றின் நின்ற துணை.
கலைஞர் உரை:
பெற்றோர்,
வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது
இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
மு.வ உரை:
இல்லறத்தில்
வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற
துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு
வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
Translation:
The men
of household virtue, firm in way of good, sustain The other orders three that
rule professed maintain.
Explanation:
He will
be called a (true) householder, who is a firm support to the virtuous of the
three orders in their good path.
______________________________________________________________________________________________________
துறந்தார்க்கும்
துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
இல்வாழ்வான் என்பான் துணை.
கலைஞர் உரை:
பற்றற்ற துறவிகட்கும்,
பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல்
வேண்டும்.
மு.வ உரை:
துறந்தவர்கும்
வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு
வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.
Translation:
To
anchorites, to indigent, to those who've passed away, The man for household
virtue famed is needful held and stay.
Explanation:
He will
be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the
dead.
______________________________________________________________________________________________________
குறள் 43:
தென்புலத்தார்
தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
கலைஞர் உரை:
வாழ்ந்து
மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம்
பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும்
இல்வாழ்வுக்குரியனவாம்.
மு.வ உரை:
தென்புலத்தார்,
தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல்
சிறந்த கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இறந்து தென்திசையில்
வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய
வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.
Translation:
The
manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is
chiefest charity.
Explanation:
The
chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct)
towards the manes, the Gods, his guests, his relations and himself.
______________________________________________________________________________________________________
குறள் 44:
பழியஞ்சிப்
பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
கலைஞர் உரை:
பழிக்கு அஞ்சாமல்
சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து
உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
மு.வ உரை:
பொருள் சேர்க்கும்
பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால்,
அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் தேடும்போது
பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை
ஒருகாலும் அழிவதில்லை.
Translation:
Who
shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken
though the ages runs.
Explanation:
His
descendants shall never fail who, living in the domestic state, fears vice (in
the acquisition of property) and shares his food (with others).
______________________________________________________________________________________________________
குறள் 45:
அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பண்பும் பயனும் அது.
கலைஞர் உரை:
இல்வாழ்க்கை
பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும்
தேவை.
மு.வ உரை:
இல்வாழ்க்கையின்
அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவி பிள்ளைகளிடத்தில்
அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின்
பண்பும் அதுவே; பயனும் அதுவே.
Translation:
If love
and virtue in the household reign, This is of life the perfect grace and gain.
Explanation:
If the
married life possess love and virtue, these will be both its duty and reward.
______________________________________________________________________________________________________
குறள் 46:
அறத்தாற்றின்
இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
போஒய்ப் பெறுவ எவன்.
கலைஞர் உரை:
அறநெறியில்
இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட
இயலுமோ? இயலாது.
மு.வ உரை:
ஒருவன் அறநெறியில்
இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது
என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு
கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான
பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.
Translation:
If man
in active household life a virtuous soul retain, What fruit from other modes of
virtue can he gain?
Explanation:
What
will he who lives virtuously in the domestic state gain by going into the
other, (ascetic) state ?
______________________________________________________________________________________________________
குறள் 47:
இயல்பினான்
இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
முயல்வாருள் எல்லாம் தலை.
கலைஞர் உரை:
நல்வாழ்வுக்கான
முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப
வாழ்பவர்தான்.
மு.வ உரை:
அறத்தின்
இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன்
ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளை அறியவும்,
அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
Translation:
In
nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for
virtue's crown hath foremost place.
Explanation:
Among
all those who labour (for future happiness) he is greatest who lives well in
the household state.
______________________________________________________________________________________________________
குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி
அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
நோற்பாரின் நோன்மை உடைத்து.
கலைஞர் உரை:
தானும் அறவழியில்
நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும்
நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
மு.வ உரை:
மற்றவரை அறநெறியில்
ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை
உடைய வாழ்க்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர்களை
அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும்
வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.
Translation:
Others
it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics'
pains such life domestic brighter shines.
Explanation:
The
householder who, not swerving from virtue, helps the ascetic in his way,
endures more than those who endure penance.
______________________________________________________________________________________________________
குறள் 49:
அறனென்ப்
பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
கலைஞர் உரை:
பழிப்புக்கு
இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.
மு.வ உரை:
அறம் என்று
சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம்
இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் என்று
சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல்
இருக்குமானால் நல்லது.
Translation:
The life
domestic rightly bears true virtue's name; That other too, if blameless found,
due praise may claim.
Explanation:
The
marriage state is truly called virtue. The other state is also good, if others
do not reproach it.
______________________________________________________________________________________________________
குறள் 50:
வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
தெய்வத்துள் வைக்கப் படும்.
கலைஞர் உரை:
தெய்வத்துக்கென
எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்
வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
மு.வ உரை:
உலகத்தில்
வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து
மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியுடன்
வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள்
ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
Translation:
Who
shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in
heaven who dwell, be placed.
Explanation:
He who
on earth has lived in the conjugal state as he should live, will be placed
among the Gods who dwell in heaven.