சேரன் செங்குட்டுவன்


சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான்இவன் கி.பிமுதலாம் நூற்றாண்டின் இறுதிப்  பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும்சோழன் மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன்பதிற்றுப்பத்துபதிகம் இவனது தாயின் தந்தை பெயரை ஞாயிற்றுச் சோழன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறதுமணக்கிள்ளி என்பது இவன் தாயின் பெயர்இப் பெயர் 'சோழன் மணக்கிள்ளிஎனக் குறிப்பிடப்பட்டுள்ளது

மணக்கிள்ளி என்னும் தாயின் பெயரை 'நற்சோணைஎன அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

காலம்

இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும்அவன் பத்தினி (கண்ணகிவணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபுமுதலாம் கயவாகு கி.பிஇரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால்செங்குட்டுவனும் கிபிஇரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும்சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

தமிழ் இலக்கியங்களில்சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறதுதமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன்கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான்அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகாது என்று எண்ணிய அவன்ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று,இமயமலையில் கல்லெடுத்துஅவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்றுஎண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும்மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்துஅறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும்கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர்இலங்கை மன்னன்மாழுவ மன்னன்குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

வரலாற்றுத் தகவல்கள்

தமிழ் இலக்கியங்களில்சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறதுதமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன்கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான்அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன்ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்றுஇமயமலையில் கல்லெடுத்துஅவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்றுஎண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும்மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்துஅறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும்கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர்இலங்கை மன்னன்மாழுவ மன்னன்குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

இந்திய சமூகத்தில் நட்புக்கும் கற்புக்கும் பெரிய மதிப்புண்டு. இந்தியாவின் பெருங்காவியங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் நட்பையும் கற்பையும் போற்றும் முன்னுதாரணப் பாத்திரங்கள் பல உள்ளன. தன் கற்பின் வலிமையால் எமனிடமிருந்து தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்டு வந்த சாவித்திரி கதையை நாம் அறிவோம்.

தன் நட்பின் வலிமையால் தன் தோழனுக்கும் கயிலாயத்தில் இடம்பெற்றுத் தந்த கதையை அறிவீர்களா? சுந்தரர்- பெருமாக் கோதையார் கதை, நட்பின் பெருமையை மட்டுமின்றி ஆடி மாத சுவாதித் திருநாளின் அருமையையும் பேசுகிறது. சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.

ஒருநாள் சேரமான் இறைவனை வழிபடும்போது சிலம்பொலி கேட்க வில்லை. மன்னன் திகைப்படைந்தான் தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ! அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ எனக் கருதி, தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிரசேரமான் முன்பு ஈசன் தோன்றி, வருந்தாதே மன்னா! என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான்.

இன்று அதில் நான் மெய்மறந்துவிட்டேன். எனவேதான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகிவிட்டது என்றார். ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய சேரன், தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான். அவரது அழைப்பையேற்று வஞ்சிக்குளம் சென்று, சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர்.

பின் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார். சேரனின் நட்பு அவரை காந்தமென ஈர்த்தது. தன்னைக் காண வந்த சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று. யானைமீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கவுரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார். சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. தலைக்குத் தலை மாலை என்ற பதிகம் பாடிக்கொண்டிருந்த அவரை, வெள்ளை யானையை அனுப்பி அழைத்துவரும்படி சிவகணங்களுக்கு உத்தரவிட்டார் ஈசன். அமரர்கள் சூழ யானையின்மீது கயிலாயம் சென்ற சுந்தரரின் நெஞ்சம் நண்பனையே நினைத்தபடி இருந்தது. தன் உள்ளுணர்வால் இதையறிந்த சேரமான், சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே தன் வெண்புரவியில் ஏறியமர்ந்து, அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத, விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது குதிரை, இருவரும் கயிலையை அடைந்தாலும் காவலர்கள் சேரமானை உள்ளே அனு மதிக்கவில்லை சுந்தரர் இறைவனை அடைந்து அவரை வணங்கி, என் ஆருயிர் நண்பன் சேரமான் வாயிலில் காத்திருக்கிறார் கருணை கூர்ந்து அவரையும் உள்ளே அழையுங்கள் என்று வேண்டி நின்றார்.

அடியார்க்கு அருளாமல் வேறு யாருக்கு ஈசன் அருளுவான்? சேரனை உள்ளே அனுமதித்ததும் அல்லாமல், இனி நீங்கள் இருவரும் சிவகணங்களுக்குத் தலைவர்களாக இருப்பீர்கள் என அருள் புரிந்தார். இவ்வாறு சுந்தரனுக்கும் சேரமானுக்கும் ஈசன் கயிலாயப் பதவி அருளிய நன்னாள்தான் ஆடி சுவாதித் திருநாள்.

திருவஞ்சிக்குளத்தில் இந்த நன்னாளை ஆண்டுதோறும் பெரிய திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவில் தமிழகத்தினிருந்து நூற்றுக்கணக்கான சிவபக்தர்கள் சென்று கலந்துகொள்வர். விழாவின் முதல் நாள் இரவன்று கொடுங்கலூர் பகவதியம்மன் ஆலயத்திலுள்ள சுந்தரர், சேரமானின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்து, யானை மற்றும் குதிரை வாகனத்தில் அமரவைத்து மேள தாளங்களுடன் அஞ்சிக்குளத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவர்.

மறுநாள் காலை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு தமிழக பாணியில் கோலாகலமான குருபூஜை விழா நடைபெறும். மேலும் அன்றைய தினம் அஞ்சிக் குளத்திலுள்ள அத்தனை உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறும். திருவஞ்சிக்குளம் ஆலயம் மட்டும்தான் கேரளத்திலேயே தேவாரச் சிறப்புப் பெற்ற தலமாகும். சுந்தரரால் பாடப்பெற்ற மலைநாட்டுத் தலம் என்ற சிறப்பும் இதற்குண்டு. கேரளாவிலேயே பள்ளியறை பூஜை நடக்கும் ஒரே தலம் இதுவாகும். சேரமானுக்கும் தில்லை சிதம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதால், இத்தலத்தை மேலைச் சிதம்பரம் என்றும் கூறுவர். இவ்வாலயத்தின் கிழக்குக் கோபுரத்தின் அடித்தளத்தில் யானை மீதமர்ந்த சுந்தரர் கோலமும், குதிரைமீதமர்ந்த சேரமான் கோலமும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.

கயிலையைக் கண்டவர்கள்சுந்தரமூர்த்தி நாயனாரை சிவனே வெள்ளை யானையை அனுப்பி கயிலைக்கு அழைத்துச் கொண்டார். அவரை தனது வெண்புரவியில் தொடர்ந்து சென்ற சேரமானும் கயிலையை அடைந்தார். இவற்றைக் கண்ணுற்ற அவ்வையார் தானும் விரைவில் கயிலை செல்லும் ஆவலில், பிள்ளையாரை பூஜை செய்ய, பிள்ளையார் தன் துதிக்கையால் அவ்வையாரைத் தூக்கிச் சென்று கயிலையில் சேர்த்தார். வர்களுக்கெல்லாம் முன்னதாக கயிலைக்கு வந்தவர் காரைக்கால் அம்மையார். பேயுருங் கொண்டு தன் தலையாலே நடந்து கயிலை வந்தவரை ஈசன் அம்மையே என்றழைத்து, பின்னர் திருவாலங்காட்டில் தன் நடனத்தைக் காட்டியருளி தன் திருவடி நிழலில் சேர்த்துக்கொண்டார். கயிலையை அடைய அப்பர் பெருமான் உடல் தளர்ந்து பாதம் நோக யாத்திரை மேற்கொண்டபோது. ஈசன் இக்குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுக. அங்கே கயிலாயக் காட்சி தருவோம் எனக் கூறி அவ்வாறே அருளினார்